Breaking News

தொல்காப்பியரரின் திணைப்பாகுபாடு

 தொல்காப்பியர் கூறும் திணைப்பாகுபாடு .

அகத்திணை ஏழு

அன்பின் ஐந்திணை; 

திணை என்றால் ஒழுக்கம் .


1.குறிஞ்சித் திணை :

ஒருவனும், ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்வது.

2.முல்லைத் திணை :

காதலன் பொருளீட்டுவதற்கோ, போர்க்களத்திற்கோ, கல்வி கற்பதற்கோ, தூதுவனாகவோ சென்ற நேரத்தில் பிரிந்து இருக்கும் சூழலில் காதலி காத்திருப்பது .


3. மருதத் திணை :

 தலைவனுக்கும், தலைவிக்கும் இடையே பல்வேறு காரணங்களால் பிணக்குகள் வரலாம். இதனை ஊடல் என்று கூறுவர். 

4. நெய்தல் திணை:

கடலில் மீன் பிடிக்கச் சென்றோ , பிற காரணங்களாலோ தலைவன் பிரிந்து சென்று, திரும்பி வர இயலாத சூழலில் தலைவி அவனுக்காகக் கவலைப்பட்டு இரங்கி நிற்றல்.

5.பாலைத் திணை :

தன் ஊரிலே வறட்சியின் காரணமாக வெளியூர் சென்று பொருளீட்டி வரலாம் என்று தலைவன் பிரிந்து செல்லும் நேரத்தில் இல்லத்தில் இருக்கும் தலைவியின் நிலை குறித்து அவன் கவலைப்படுதலும், செல்லும் வழியில் தலைவனுக்கு என்ன நேருமோ என்று தலைவி இல்லத்தில் இருந்து கவலைப்படுதல்.

ஒருவனும் ஒருத்தியும் விரும்புகின்ற ஐந்திணைகள் மட்டுமே அன்பின் ஐந்திணை என்று போற்றப்பட்டது.


*கைக்கிளை*, *பெருந்திணை* ஆகிய இரண்டும் தமிழ்ச் சான்றோர்களால் போற்றப்படாத ஒழுக்கங்களாகும். 

6.கைக்கிளை :

ஆண் விரும்பி, பெண் விரும்பாமலோ அல்லது பெண் விரும்பி, ஆண் விரும்பாமலோ இருப்பின் அது கைக்கிளை. அதாவது ஒரு தலைக் காமம். 

7.பெருந்திணை :

காதலிக்கும் ஆணைவிடப் பெண் மிகவும் மூத்தவளாகவோ, பெண்ணைவிட ஆண் மிகவும் மூத்தவனாகவோ இருப்பின் அது பெருந்திணை இது பொருந்தாக் காமம்.




from கண்ணாடி
via IFTTT

கருத்துகள் இல்லை

இத்தளத்தை பார்வையிட்ட தங்களுக்கு எனது நன்றி.